சோளிங்கர் எம்எல்ஏ அலுவலகத்திற்கு 4 அடி உயர திருவள்ளுவர் திருவுருவப் படம் தமிழ் ஆர்வலர்கள் வழங்கினர்.

ராணிப்பேட்டை மாவட்டம்; சோளிங்கர் தமிழ் ஆர்வலர்கள் சார்பில் சட்டமன்ற அலுவலகத்திற்கு 4 அடி உயர திருவள்ளுவர் திருவுருவப் படம் வழங்கும் நிகழ்ச்சி சோளிங்கர் சட்டமன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழச்ச்சிக்கு தமிழ் ஆர்வலர் சண்முகம் தலைமை தாங்கி அவரது சொந்த செலவில் வடிவமைக்கப்பட்ட திருவள்ளுவர் படத்தை சோளிங்கர் எம்எல்ஏ ஏ.எம். முனிரத்தினத்திடம் வழங்கினார். காங்கிரஸ் நகர தலைவர் கோபால் வரவேற்றார்.
மாவட்ட செயலாளர் அருன், ஒன்றிய செயலாளர் செல்வம் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ் ஆர்வலர்கள் மேயர் முனுசாமி, சிவபாதம், மாணிக்கவாசு, ராஜன், முனுசாமி, தியாகராஜன், பூபதி, பெருமாள், சண்முகம், கலாநிதி, கார்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES ராணிபேட்டை
TAGS அரசியல்எம்எல்ஏ முனிரத்தினத்தினம்சோளிங்கர்சோளிங்கர் தமிழ் ஆர்வலர்கள்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருவள்ளுவர் திருவுருவப் படம்முக்கிய செய்திகள்