சோளிங்கர் சார் பதிவாளர் அலுவலகம் சனிக்கிழமைகள் தோறும் மூடப்பட்டு கிடக்கும் அவலம்!

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் பேருந்து நிலையம் அருகில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை மட்டுமே இயங்குகிறது. சனிக்கிழமைகளில் ஒரு நாளும் இயங்குவது கிடையாது.
இதற்கு காரணம் கேட்டால் பத்திரப்பதிவு செய்ய வரும் நபர்களிடம் விடுமுறை கட்டணமாக தலா ரூ.1000 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் யாரும் சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு செய்ய வருவதில்லை என்றும், குறிப்பாக ஆயிரம் ரூபாய் கட்டணம் அதிகம் என்பதாலும் இதில் யாரும் ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.
குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தற்போது சார் பதிவாளராக பணி செய்யும் ரா.கோவிந்தசாமி அலுவலகத்தை நடத்த வேண்டும் அரசுக்கு பணத்தை பெருமளவில் ஈட்டித் தர வேண்டும் என்ற எண்ணம் துளி கூட இல்லை.
இந்த சோளிங்கர் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு பத்திரப் பதிவுத்துறை நிர்ணயித்துள்ள கட்டணம் ரூபாய் 17 கோடி இலக்கு ஆகும். ஆனால் அதை எல்லாம் விட்டுவிட்டு சனிக்கிழமைகளில் யார் வந்து கேட்டாலும் அலுவலகம் மூடி கிடக்கிறது என்றால் அவர் களப்பணிக்குச் சென்றுள்ளார் என்று அங்கு பணியில் உள்ள வாட்ச்மேனிடம் சொல்லிவிட்டு அவர் கம்பி நீட்டி விடுகிறார் என்றே சொல்லலாம்.
இப்படி பொறுப்பற்று பணிபுரியும் கோவிந்தசாமி போன்ற சார் பதிவாளர்கள் இருந்தால் அரசின் கஜானா எப்போதுமே நிரம்பாது என்பது உறுதி. சனிக்கிழமைகளில் அனைத்து பதிவாளர் அலுவலகங்களும் இயங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளபோதும்,
அரசு உத்தரவை காற்றிலே பறக்க விட்டு விட்டு அதற்கு தகுந்த காரணம் ஒன்றை சொல்லிவிட்டு சோளிங்கரில் பணியாற்றும் சார் பதிவாளர் கோவிந்தசாமி போன்றோர் அரசிடம் கண்ணாமூச்சு விளையாடி வருகின்றனர்.
இதுபோன்ற பணி செய்ய இயலாதவர்களை வேறு இடங்களுக்கு மாற்றி விட்டு அரசு என்ன சொல்கிறதோ அந்த உத்தரவை மதித்து அதைக் கேட்டு நடக்கும் சார் பதிவாளர்களை சோளிங்கர் போன்ற பகுதிகளில் சார் பதிவாளர்களாக பணியமர்த்த வேண்டும் என்பதே இந்த பகுதி வாழ் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.
பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி சோளிங்கர் சார் பதிவாளர் ரா. கோவிந்தசாமிக்கு காப்பு கட்டுவாரா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.