BREAKING NEWS

சோளிங்கர் ரோப் கார் அமைவிடத்தில் அமைச்சர் ஆர் காந்தி ஆய்வு.

சோளிங்கர் ரோப் கார் அமைவிடத்தில் அமைச்சர் ஆர் காந்தி ஆய்வு.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் அமைந்துள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பிரசித்திபெற்ற சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ரோப்கார் அமைவிடத்தில் 11 கோடி மதிப்பீட்டில் நடைப்பெற்று வரும் பக்தர்களுக்கான அடிப்படை வசதி கட்டுமான பணிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி, எம்பி ஜெகத்ரட்சகன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மாவட்ட துணைச் செயலாளர் சிவானந்தம், தலைமை செயற்குழு உறுப்பினர் அசோகன், நகர செயலாளர் கோபி, நகராட்சி துணைத் தலைவர் பழனி, கவுன்சிலர் ராஜேந்திரன், மோகனாசண்முகம், மற்றும் நந்திமங்கலம் நரசிம்மன், இளநிலை பொறியாளர் கிஷோர், இளநிலை உதவியாளர் நரசிங்கராஜன் உடனிருந்தனர்.

Share this…

CATEGORIES
TAGS