சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் 3 ம்நாள் பிரம்மோற்சவம் முன்னிட்டு ஹம்ச வாகன உற்சவம் மற்றும் ஹேமகோடி விமான உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் கடந்த 26 ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கண்ணன் புறப்பாடு, சேஷ வாகனம், சிம்ம வாகன உற்சவம் நடைபெற்றது.
3ம் நாள் பிரம்மோற்சவத்தில் காலை ஹம்ச வாகன உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி உற்சவர் ஸ்ரீ தேவி பூதேவி சமேத பக்தோசித பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் ஹம்ச வாகனத்தில் எழுந்தருளி 8 மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
CATEGORIES ஆன்மிகம்
TAGS சோளிங்கர்சோளிங்கர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயில் சித்திரை பிரம்மோற்சவம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்ராணிபேட்டைராணிபேட்டை மாவட்டம்ராணிப்பேட்டை மாவட்டம்