டாஸ்மாக் கடைகளை அகற்றி ஒதுக்குப்புறத்தில் வைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

திருச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை நகரம், கிராமங்களில் இருந்து அகற்றி மாவட்டத்தின் ஒதுக்குப்புறங்களில் செயல்படுத்த சமூக ஆர்வலர்கள் விஜயகுமார், தங்கமணி ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் பல இடங்களில் இயங்கி வரும் அரசு மதுபான கடைகளை தமிழக அரசு மக்கள் நடமாட்டம் இல்லாத ஒதுக்கு புறமான பகுதிகளில் இடமாற்றம் செய்து, ஒரே இடத்திற்கு கொண்டு சென்றால் மது அருந்துபவர்கள் பல கிலோமீட்டர் கடந்து சென்று மது அருந்தும் நிலையை ஏற்படுத்தி காவல்துறையின் துணையோடு கொண்டு வரும் பட்சத்தில் பொதுமக்கள் வசிக்கும் கிராமங்கள் முதல் பெரும் மாநகராட்சிகள் வரை உள்ள பகுதிகளில் எந்தவித அசம்பாவிதமோ குற்ற செயல்களோ ஏற்படுவதை தடுக்க முடியும் என்றும்,
மேலும் தற்சமயம் ஒரு சில கல்லூரி மாணவிகளும் பெண்களும் மது அருந்தும் கலாச்சாரம் எழும்பி வருவதை பார்ப்பதாகவும்,
சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் ஆகியோரின் எதிர்காலம் கருதி திருச்சியில் உள்ள அனைத்து மதுபான கடைகளிலும் மக்கள் நடமாட்டம் இல்லாத ஒதுக்கு புறமான ஒரே இடத்தை தேர்வு செய்து அந்த இடத்திற்கு திருச்சியில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகளையும் ஏமாற்றம் செய்யும்படியும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.