BREAKING NEWS

டிஜிட்டல் சுகாதார அட்டை இலவச பதிவு முகாம்.

டிஜிட்டல் சுகாதார அட்டை இலவச பதிவு முகாம்.

 

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் துங்காவி கிராமத்தில் ஸ்ரீ ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியின் கணிதவியல் விரிவாக திட்டத்தின் கீழ்
ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷின் சுகாதார அட்டை இலவச பதிவு முகாம் நடந்தது.

 

கணிதவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவிகள் இத்திட்டத்தினை இலவச பதிவு முகமாக நடத்தினர். துங்காவி ஊராட்சி சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் பொது மக்களுக்கு சுகாதார அட்டையின் பயன்களை குறித்து கல்லூரியின் பேராசிரியர்கள் எடுத்து உரைத்தனர் சுகாதார அட்டையினை இலவசமாக பதிவு செய்து சுகாதார அட்டையினை வழங்கினர்.

 

 

சிறப்பு விருந்தினர்கள் முன்னாள் மடத்துக்குள சட்டமன்ற உறுப்பினர் இரா ஜெயராமகிருஷ்ணன் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் கே.ஈஸ்வரசாமி மற்றும் துங்காவி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பொன்னுத்தாய் தங்கராசு பொது மக்களுக்கு சுகாதார அட்டையினை வழங்கினர்.

 

ஸ்ரீ ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர் நா. ராஜேஸ்வரி இம் முகாமினை தலைமை வகித்தார்.கணிதவியல் பேராசிரியர்கள் முனைவர் ஆ. கலாவதி முனைவர் ரா. பரணிதா மற்றும் கணிதவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவிகள் இந்நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தனர்.

 

இம்முகாமினால் பொதுமக்களுக்கு இதுபோன்று ஒரு சுகாதார அட்டை இருப்பது தெரிய வந்தது இதனால் பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் நன்றிகளைத் தெரிவித்தது மாணவிகளை பாராட்டினர்.

 

CATEGORIES
TAGS