தஞ்சாவூரில் அகல்விளக்கு தயாரிப்பு தொழில், மழையால் பாதிப்பு.

தமிழ் மாதத்தின் கார்த்திகை மாதம் வரும் 17 ந் தேதி தொடங்கி கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 6 ந் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தஞ்சையை அடுத்த கரம்பை பகுதியில் பாரம்பரியமாக மண்ணால் ஆன கார்த்திகை அகல் விளக்கு செய்யும் பணி தொடங்கி நடைபெற்று.
வருகிறது, இந்நிலையில் தஞ்சையில் விட்டு விட்டு மழை பெய்வதால் அகல் விளக்கு செய்யும் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.,
அகல்விளக்கு செய்வதற்கு களிமண் கிடைப்பது இல்லை, மழையால் அகல் விளக்கு காயாமல் ஈரப்பதமாக இருப்பது, மற்றும் பொதுமக்கள் அலுமினிய விளக்குகள், மெழுகு விளக்குகள், பிளாஸ்டிக் விளக்குகள் போன்றவற்றை பயன்படுத்துவதால் அகல் விளக்கு பயன்படுத்துவது அரிதாகிவிட்டது. இதனால் இத்தொழில் அழிந்துவரும் நிலையில் உள்ளது.
பாரம்பரியமாக இத் தொழிலை செய்து வரும் தொழிலாளர்கள் இதனால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு தமிழக அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.