தஞ்சாவூர் பெரிய கோவிலில் 15 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் 21 லட்சம் உண்டியல் பணம் வசூல்.
தஞ்சை பெரிய கோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் ஆலயம் உலக பிரசித்தி பெற்று விளங்குகிறது இக்கோவில் கட்டிடக்கலைக்கும் சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்குகிறது.
இக்கோவிலுக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளியூர்,உள்ளூர் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் என வந்திருந்து கோவிலின் கட்டிடக்கலையை பார்த்தும் சுவாமியையும் தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் தங்களது பணத்தை காணிக்கையாக செலுத்துகின்றனர், இந்நிலையில் தஞ்சை பெரிய கோவிலில் உள்ள 11 உண்டியலில் உள்ள பணம் எண்ணப்பட்டது.
இதில் மலேசியா சிங்கப்பூர் குவைத் ஐரோப்பியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் இந்திய ரூபாய் 21 லட்சத்து 84 ஆயிரம் பணம் உண்டியலில் இருந்து பெறப்பட்டு வங்கியில் செலுத்தப்பட்டது.
இப்பணியில் மகளிர் சுய உதவி குழுக்கள், கோவில் பணியாளர்கள், காப்பீட்டு முகவர்கள் என 50 க்கும் மேற்பட்டோர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.