தஞ்சையில் அடுத்தடுத்து வந்த 3 அரசு பேருந்துகளில் படிக்கட்டுகளில் ஆபத்தான நிலையில் மாணவர்கள் பயணம் செய்தனர்.

தஞ்சையில் அடுத்தடுத்து வந்த 3 அரசு பேருந்துகளில் படிக்கட்டுகளில் ஆபத்தான நிலையில் மாணவர்கள் பயணம் செய்தனர். நடவடிக்கை எடுக்க சமுக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள்.
தஞ்சையில் பள்ளி கல்லூரிக்கு செல்லக்கூடிய மாணவ மாணவிகள் தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் சென்று பல்வேறு பள்ளி கல்லூரிகளுக்கு செல்கின்றனர்.
இந்நிலையில் காலை நேரத்தில் பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு சென்ற அடுத்தடுத்து 3 அரசு பேருந்துகளில் மாணவர்கள் பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணம் செய்தனர்.
போக்குவரத்து போலீசார் இதனை ஒழுங்கு செய்ய வேண்டும் என்றும் காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
CATEGORIES தஞ்சாவூர்