தஞ்சையில் தென்னிந்திய அளவிலான டென்னிஸ் போட்டி 120 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்பு.

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை அடுத்த வல்லத்தில் தென்னிந்திய அளவிலான சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு இடையேயான டென்னிஸ் போட்டி தொடங்கியது.
இதில் தமிழ்நாடு ஆந்திரா தெலுங்கானா பாண்டிச்சேரி மாநிலங்களை சேர்ந்த 120 சிபிஎஸ்சி பள்ளிகளை சேர்ந்த 420 மாணவ மாணவிகள் பங்கேற்றுள்ளனர். தஞ்சையில் இன்று தொடங்கிய இந்த போட்டி நான்கு மையங்களில் நடைபெறுகிறது. இந்த போட்டியானது நான்கு நாட்கள் நடைபெறுகிறது.
வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட உள்ளது இதற்கான ஏற்பாடுகளை சிபிஎஸ்சி ஸ்போர்ட்ஸ் போர்டு ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற அணிகள் தேசிய அளவிலான போட்டியில் பங்கு பெற உள்ளன.
இந்த போட்டியானது மாணவ மாணவிகளுக்கு இடையே தனித்தனியாக 17 வயதுக்குட்பட்ட மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவிகள் என்ற இரு பிரிவின் கீழ் நடைபெறுகிறது. ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டியாக நடைபெறுகிறது.