BREAKING NEWS

தஞ்சையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.

தஞ்சையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.

நீட் தேர்வுக்கு எதிராக ஒரு பக்கம் சட்ட போராட்டம் நடைபெற்று வந்தாலும் மாணவர்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக நீட் தேர்விற்கான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

 

கொரோனா காரணமாக 2021 22-ல் ஒரு லட்சத்து 90 ஆயிரம் மாணவர்கள் இடைநிற்பது கண்டறியப்பட்டு மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த மாணவர்களை பள்ளியில் சேர்க்கவில்லை என்றால் பொதுத்தேர்வு இந்த ஆண்டு ஆறு லட்சத்து 70 ஆயிரம் தான் எழுதி இருப்பார்கள்.

 

தற்போது 8 லட்சத்து 81 ஆயிரம் பேர் எழுத வேண்டும் என்பதற்காக தான் செய்து கொண்டிருக்கிறோம். வழக்கமாக 4.5, 4.6 சதவீதம் தான் தேர்வு எழுதாமல் இருப்பார்கள் இந்த ஆண்டு 5 சதவீதம் வந்து கொண்டிருக்கிறது.

 

இதற்காக நாங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று சொல்லி இருக்கிறோம். கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும், தேர்ச்சி பெறாத மாணவர் உடன் சேர்த்து தேர்வுக்கு வராதவர்களையும் சேர்த்து இந்த ஆண்டு சிறப்பு பயிற்சி அளித்து ஜூன் மாதத்தில் தேர்வு எழுத வைத்து விடுவோம்.

 

இந்த அளவு என்பது குறைய வேண்டும் என்பதுதான் எங்களது எண்ணம். அதை சரி செய்ய வேண்டிய பொறுப்பு பள்ளிக்கல்வித்துறைக்கு உள்ளது அதை படிப்படியாக செய்வோம்.

 

CATEGORIES
TAGS