தஞ்சை நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் வீடு மனை இல்லாதவர்கள் அரசு இடத்தில் குடியேறும் போராட்டம் நடத்தி வருவதால் தஞ்சையில் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தஞ்சை மாநகராட்சி அருகே உள்ள நாஞ்சிக்கோட்டை ஊராட்சி பகுதியில் பால் பண்ணை அருகில் பெரிய புதுப்பட்டினம் வாரி அருகே உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் முனியாண்டார் காலனி, மறியல், சிலோன் காலனி நாஞ்சிக்கோட்டை, சூரியம்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடு இல்லாத ஏழை எளிய மக்கள் பலமுறை அரசுக்கு விண்ணப்பித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லாததால், தஞ்சை பால்பண்ணை அருகே உள்ள பெரிய புதுப்பட்டினம்வாரி அருகே உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் குடியேறி வருகின்றனர்.
மேலும் பொதுமக்கள் தெரிவிக்கையில் இந்த வாரி புறம்போக்கு இடத்தை பல கோடீஸ்வரர்களும் , லட்சாதிபதிகளும் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளனர் மேலும் பிளாட்டு போட்டு விற்பனை செய்து வருகிறார்கள் இதனை மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை எனவே வீடு இல்லாத எங்களுக்கு தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக இந்த இடத்தில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது பற்றி சிறுத்தைகள் கட்சி யன் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில துணைச் செயலாளர் கோ.ஜெய்சங்கர் கூறுகையில் இந்த இடத்தினை பல கோடீஸ்வரர்களும் ,அரசியல் பலம் கொண்டவர்களும், ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர்.
இதனை பலமுறை அரசுக்கு தெரிவித்தோம் எந்தவித நடவடிக்கையும் இல்லாததால் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனிஸ்ட்) தலைமையில் இந்த குடியேறும் போராட்டத்தை நடத்தி வருகிறோம் இவர்களுக்கு உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். இல்லை என்றால் எங்களது தொடர்ச்சியான போராட்டத்தை மக்களைத் திரட்டிகொண்டு செல்வோம் என்று தெரிவித்தார்.