BREAKING NEWS

தஞ்சை நாலுகால் மண்டபம் ஸ்ரீதேவி. பூதேவி சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் சொர்க்கவாசல் அருள் பாலித்தார்.

தஞ்சை நாலுகால் மண்டபம் ஸ்ரீதேவி. பூதேவி சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் சொர்க்கவாசல் அருள் பாலித்தார்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, தஞ்சை நாலுகால் மண்டபம் ஸ்ரீதேவி. பூதேவி சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் சொர்க்கவாசல் என்னும் பரமபாத வாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று பக்தி கோஷமிட்டு வழிப்பட்டனர்.

தஞ்சை நாலுகால் மண்டபத்தில் பிரசித்திப் பெற்ற ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சுவாமி, அம்பாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோவில் மண்டபத்தில் எழுந்தருளினர்.

 

 

அங்கு சோடப உபச்சாரங்கள் நடைப்பெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டன. தொடர்ந்து அதிகாலை 4.15 மணிக்கு சுவாமி அம்பாள் சொர்க்கவாசல் என்கிற பரமபதவாசல் வழியாக மங்கள வாத்யங்கள், பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட எழுந்தருளினார்.

 

 

தொடர்ந்து ஆழ்வார், சுவாமி எதிர்சேவையுடன் மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டு, சுவாம, அம்பாள் அர்த்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்து வருகிறார்.

 

CATEGORIES
TAGS