தஞ்சை பகுதிகளில் பரவலாக மழை. கார்த்திகை தீப விற்பனை அகல் விளக்குகள் மழை நீரில் அடித்து செல்லப்பட்டதால் வியாபாரிகள் வேதனை.

தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஒரு மணி நேரமாக பல்வேறு பகுதிகளில் பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர், திருவையாறு, அம்மன் பேட்டை, பாபநாசம், அய்யம்பேட்டை, கும்பகோணம், திருவிடைமருதூர்ஃ கல்லணை, செங்கிப்பட்டி, பூதலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மற்றும் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தொடர்மழை காரணமாக தஞ்சையின் பல்வேறு பகுதிகளில் தாழ்வான பகுதியில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் நாளை மறுதினம் கார்த்திகை பண்டிகை கொண்டாட உள்ளத
நிலையில்,
மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து அகல்விளக்குகளை விற்க வியாபாரிகள் சாலையோரம் கடைகள் அமைத்துள்ளனர். இந்நிலையில் இந்த தொடர்மழை காரணமாக சாலையில் வைத்து விற்பனை செய்யப்பட்ட அகல் விளக்குகள் மழை நீரில் அடித்து செல்லப்பட்டன.,
மழைநீரில் அடித்து செல்லப்பட்ட அகல்விளக்குகளை வியாபாரி தேடி பொறுக்கி பாதுகாப்பான இடத்தில் வைக்கின்றனர். வியாபாரிகள் தங்களுடைய வாழ்வாதமும் மழையால் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.