BREAKING NEWS

தந்தை குடியை நிறுத்த வேண்டும் – கடிதம் எழுதி வைத்து விட்டு மகள் தற்கொலை!

தந்தை குடியை நிறுத்த வேண்டும் – கடிதம் எழுதி வைத்து விட்டு மகள் தற்கொலை!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சின்ன ராஜா குப்பத்தை சேர்ந்தவர் பிரபு இவர் கூலி தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இவரது மகள் விஷ்ணு பிரியா வயது 16 குடியாத்தம் நெல்லூர் பேட்டை பகுதியிலுள்ள அரசு நிதி உதவி பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சுமார் 410 மதிப்பெண் பெற்றுள்ளார்.

 

இந்த நிலையில் விஷ்ணு பிரியாவின் தந்தைக்கு குடிப்பழக்கத்தால் வீட்டில் அவ்வப்போது சண்டை காரணமாக மன வருத்தத்தில் இருந்துள்ளார் அதில் மன வேதனை அடைந்த விஷ்ணு பிரியா இன்று மாலை கடிதம் எழுதி வைத்து அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதில் எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை எனது தந்தை குடி பழக்கத்தை நிறுத்தி விட வேண்டும். எனது குடும்பம் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கின்றதோ அப்போதுதான் எனது ஆத்மா சாந்தி அடையும் என கடிதம் எழுதி வைத்துள்ளார்.

 

இது குறித்து தகவல் அறிந்த குடியாத்தம் தாலுக்கா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு பிரோத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this…

CATEGORIES
TAGS