தனக்கர்குளம் ஊராட்சியில்…பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரச்சார பேரணி.

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம், தனக்கர்குளம் ஊராட்சி சிவசுப்பிரமணியபுரம் கிராமத்தில்..
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பேரணி வட்டார ஒருங்கிணைப்பாளர் வாணிஸ்ரீ தகவலின்பேரில் சமுதாய சுய உதவிக்குழு பயிற்றுனர் தலைமையில் பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியில் பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுத்தல், பாலியல் குற்றங்களை தடுத்தல் பெண் கல்வியை ஊக்குவித்தல் புதுமைப்பெண் திட்டத்தை அனைவரிடமும் கொண்டு சேர்த்தல் பாலின சமத்துவத்தை ஆதரிப்போம் பெண் குழந்தைகளை காப்போம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி பெண்களுக்கு எதிரான வன்முறை விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.
இந்த பேரணியில் மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த ஏராளமான பெண்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் கலந்துகொண்டனர்.
இரவில் பெண்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியை நிறைவு செய்தனர்.