தனியார் கல்லூரியில் சமத்துவ பொங்கல் திருவிழா.

தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் திருவிழா தமிழகம் எங்கும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது .
பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் முக்கிய பண்டிகை ஆகும்.
இந்த விழா தென்னிந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசஸ் என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.
பொங்கல் திருவிழா உழைக்கும் மக்களுக்காவும் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.
இந்தப் பொங்கல் பண்டிகை இந்து கடவுளான சூரிய தேவனுக்கும் இயற்கைக்கும் அர்ப்பணிக்கப்பட்டது.
இந்தப் பொங்கல் பண்டிகை தமிழகத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளிலும் சமத்துவ பொங்கல் விழாவாக கொண்டாடபடுவது வழக்கம்
அந்த வகையில் தேனி மாவட்டம் வடபுதுப்பட்டியில் அமைந்துள்ள நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் திருவிழா நடைபெற்றது.
சுமார் 2500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்ற இந்தப் சமத்துவ பொங்கல் திருவிழாவில், மாணவ மாணவிகளுக்கு கபடி சிலம்பம், பானை உடைத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தலைவர் ராஜ்மோகன் துணைத்தலைவர் கணேஷ் , பொதுச் செயலாளர் ஆனந்தவேல் பழனியப்பன் மற்றும் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் நிர்வாக குழு உறுப்பினர்கள் கல்லூரி பேராசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.