BREAKING NEWS

தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலைஞர் நூற்றாண்டு கட்டிடத்தை திறந்து வைத்து காட்பாடியில் பேச்சு.

தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலைஞர் நூற்றாண்டு கட்டிடத்தை திறந்து வைத்து காட்பாடியில் பேச்சு.

கர்நாடக அரசு தண்ணீர் தறாததால் தஞ்சாவூரில் பயிர்கள் காய்கிறது தமிழக விவசாயிகள் பாதிக்கபடுவதை தடுக்க நான் இரண்டு தினங்களாக டெல்லி சென்று மத்திய அமைச்சரை சந்தித்து தண்ணீர் பெற நடவடிக்கை எடுத்து வருகிறேன்.

இன்றைக்கு அமைச்சரவை கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை ரூ,1200 ஆக உயர்த்தியுள்ளோம்.

மாநகராட்சி ஆணையர் தூய்மைபணிகள் நடக்கிறது சாலைகள் சரியாக உள்ளதா என ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளேன்.

தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலைஞர் நூற்றாண்டு கட்டிடத்தை திறந்து வைத்து காட்பாடியில் பேச்சு..

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கழிஞ்சூரில் திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு மூன்றடுக்கு கட்டிடம் திறப்பு வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு திமுக பொதுசெயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கட்டிடத்தை திறந்து வைத்தார்

இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார், துணை மேயர் சுனில் குமார்,1-வது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா உள்ளிட்டோரும் திரளான பொதுமக்களும் பங்கேற்றனர்.

 

இந்த விழாவில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கிறது இதனால் தஞ்சாவூரில் தண்ணீர் செல்லாமல் விவசாய பயிர்கள் பாதிகபடுகிறது விவசாயிகளும் பாதிகபடும் நிலை உள்ளது.

 

தமிழகத்தில் ஆறுகள் ஏரிகள் குளங்களுக்கான அமைச்சர் நான் தான் உடனே விவசாயிகளுக்கு தண்ணீரை பெற்று தர இரண்டு தினங்களாக டெல்லி சென்று மத்திய அமைச்சரை சந்தித்து தண்ணீர் பெற நடவடிக்கை எடுத்துக் கொண்டு வருகிறேன் இன்றைக்கு அமைச்சரவை கூட்டத்தில் முதியோர் உதவிதொகை ரூ,1200 ஆக உயர்த்தி அறிவித்தோம் மகளிர்களுக்கு உரிமை தொகையையும் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் வழங்க உள்ளோம்.

 

வேலூர் மாநகராட்சியில் செய்து முடிக்கப்பட்ட பல பணிகளுக்கு மாநகராட்சி சார்பில் இன்னும் பில்லுக்கான பணம் தரவில்லை என புகார் கூறியிருந்தனர் அது குறித்து ஆணையருக்கு பேசி பில்களுக்கான தொகை தருமாறு கூறியுள்ளேன் மேலும் சாலைகள் தூய்மை படுத்தாமல் இருக்கிறது சாலைகளும் சரியில்லை இவைகளை ஆய்வு செய்ய வேலூர் மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளேன் அவர் வந்து ஆய்வு செய்வார் என பேசினார். 

CATEGORIES
TAGS