BREAKING NEWS

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் பவானி வட்டார கிளை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் பவானி வட்டார கிளை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் பவானி வட்டார கிளை சார்பில் பவானி அந்தியூர் மேட்டூர் பிரிவு ரோட்டில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில செயற்குழு உறுப்பினர் பூங்கொடி தலைமை வகித்தார். பவானி வட்டார தலைவர் விஜயால், துணைத் தலைவர் லீலா, செயலாளர் விஜயலட்சுமி, பொருளாளர் வனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் பத்து குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் பிரதான மையங்களை மினி மையமாக்குவதையும் ஐந்து குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் மினி மையங்களை பிரதான மையத்தோடு இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், ஓய்வு பெற்றவர்களுக்கு ஜிபிஎப் பணம் வழங்கிட வேண்டும் பணியில் இருக்கும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஜிபிஎப் லோன் வழங்கிட வேண்டும்,

 

 

மகப்பேறு விடுப்பு ஒரு வருடம் அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் அங்கன்வாடி ஊழியர்களுக்கும் வழங்கிட வேண்டும். பத்து ஆண்டுகள் பணி செய்த அங்கன்வாடி உதவியாளர்களுக்கு எந்த விதமான நிபந்தனையும் இன்றி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றி கொடுக்க வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

 

அதேபோல் தற்போது வட்டார அளவில் நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டமானது இதனைத் தொடர்ந்து மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் மிகப்பெரிய போராட்டம் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர்‌ நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS