BREAKING NEWS

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் திருவெறும்பூர் கடைவீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் திருவெறும்பூர் கடைவீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

 

 

அதன் ஒரு பகுதியாக திருச்சி திருவெறும்பூர் கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் மாவட்ட பொருளாளர் சித்ரா தலைமை வகித்தார்.

 

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலையை 200 நாட்கள் தொடர்ந்து வழங்கிட கோரியும், ரூ600 சம்பளம் வழங்ககோரியும், வீடு இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்க கோரியும், மற்றும் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தியும் கோரிக்கை முழக்க கோஷங்கள் எழுப்பப்பட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

 

இதில் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS