BREAKING NEWS

தமிழ்நாடு ஒப்பந்த மின் ஊழியர்கள் சார்பில் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம்.

தமிழ்நாடு ஒப்பந்த மின் ஊழியர்கள் சார்பில் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம்.

நாகப்பட்டினம் மாவட்டம் பல ஆண்டுகளாக பணிபுரியும் மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுரித்தி மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மழை, புயல், வெள்ள பாதிப்புகளின் போது இரவு பகல் பாராமல் பணி புரிந்து மின்சார வாரியத்தை தலைநிமிர வைத்த மின்சார வாரிய ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யவும்,
தமிழ்நாடு அரசும், மின்சார வாரியமும் அறிவித்த படி தினக்கூலியாக 380ரூ அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் வழங்க வலியுறுத்தியும்,
k2மற்றும் சிட் அக்ரிமெண்டில் பல ஆண்டுகலாக பணி செய்த ஒப்பந்த தொழிலாளர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தியும்,

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வருகை பதிவேடு, மின் வாரியத்தில் ஒப்பந்த பணியாளர்கள் இல்லை என்ற அறிக்கையை கைவிட்டு பணி சான்றிதழ் வழங்கவும்,
பேச்சிவார்த்தையின் மூலம் ஊதிய உயர்வு, வேலை பளு போன்றவற்றை தீர்வு காணுமாறு ஒப்பந்த மின் ஊழியர்கள் இந்த மறியல் போராட்டத்தில் கோரிக்கைகளாக முன்வைக்கப்பட்டன.
இந்த போராட்டத்தை தமிழ் நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு CITU முன்னின்று நடத்திய இப்போராட்டத்தில் தரங்கம்பாடி தாலுக்காவிற்கு உட்பட்ட ஒப்பந்த மின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS