தரங்கம்பாடி அருகே நல்லாடை ஊராட்சியில் புதிய மின்மாற்றி துவக்க விழா நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா நல்லாடை ஊராட்சி முதலியார் தெருவில் குறைந்த மின் அழுத்தத்தால் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் 10 லட்சம் செலவில் 100 கிலோ வாட் திறன் கொண்ட புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மின் வாரிய செயற்பொறியாளர் கலியபெருமாள் தலைமை வகித்தார். உதவி மின் பொறியாளர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா எம்.முருகன் கலந்துகொண்டு புதிய மின்மாற்றிய தொடங்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், தஞ்சை மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பி.எம். ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES மயிலாடுதுறை
TAGS சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன்தமிழ்நாடுதரங்கம்பாடி தாலுகாதலைப்பு செய்திகள்திமுகநல்லாடை ஊராட்சிபுதிய மின்மாற்றிமயிலாடுதுறை மாவட்டம்முக்கிய செய்திகள்