BREAKING NEWS

தரங்கம்பாடி தூய தெரசா மகளிர் கல்லூரியில் விளையாட்டு விழா.

தரங்கம்பாடி தூய தெரசா மகளிர் கல்லூரியில் விளையாட்டு விழா.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தூய தெரசா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆறாம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.

 

 

விளையாட்டு விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் மேஜர் முனைவர் வீ. காமராசன் தலைமை தாங்கினார். கல்லூரியின் செயலர் அருட்சகோதரி கருணா ஜோசப் முன்னிலை வகித்தார். இவ் விளையாட்டு விழாவிற்கு நாகப்பட்டினம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் கு.ஜவகர் IPS சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டியை துவக்கி வைத்தார்.

 

 

மாணவிகளின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையில் தானே விளையாட்டு போட்டியில் கலந்துகொண்டு விளையாடி மாணவிகளை உற்சாகபடுத்தினார். பின்பு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். விளையாட்டு விழாவிற்கு தரங்கம்பாடி மற்றும் பொறையார் பகுதியை சேர்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

 

செய்தியாளர் க. கார்முகிலன்.

CATEGORIES
TAGS