BREAKING NEWS

தரங்கம்பாடி பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் எம்எல்ஏ நிவேதா முருகன் பங்கேற்பு

தரங்கம்பாடி பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் எம்எல்ஏ நிவேதா முருகன் பங்கேற்பு

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா பொறையார் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள சமத்துவபுரத்தில் பேரூராட்சி மன்ற தலைவர் சுகுண சங்கரி குமரவேல் தலைமையில் நடைபெற்றது. தரங்கை பேரூர் செயலாளர் பூபதி கமலக்கண்ணன் துணைத் தலைவர் பொன் ராஜேந்திரன் பேரூர் திமுக செயலாளர் முத்துராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

 

இதில் சிறப்பு அழைப்பாளராக பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டார். சமத்துவ பொங்கலை முன்னிட்டு தோரணங்கள் கட்டப்பட்டு பெரிய பானைகளில் இஞ்சி கொத்து மஞ்சள் கொத்து வைத்து பச்சரிசி வெல்லம்பால் கலந்து பொங்கல் வைக்கப்பட்டது.

 

 

இஸ்லாமிய பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பொங்கல் வைத்து பொங்கல் பொங்கி வரும் பொழுது பொங்கலோ பொங்கல் என்று உற்சாக குரல் எழுப்பி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பெண்களுக்கான ரங்கோலி போட்டி திடக்கழிவு மேலாண்மை என்ற தலைப்பில் நடைபெற்றது.

 

இதில் தரங்கம்பாடி மற்றும் பொறையார் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் பங்கேற்று குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பது குறித்து வண்ணக் கோலங்களாக வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

 

 

ரங்கோலி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு எம்எல்ஏ நிவேதா எம் முருகன் பரிசுகளை வழங்கினார் மேலும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கினார். இதில் பேரூராட்சி 18 வார்டு கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

 

CATEGORIES
TAGS