BREAKING NEWS

புதிதாக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்ட திறந்து வைத்தார்.

புதிதாக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்ட திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய இனாம்மணியாச்சி பகுதியில் உள்ள வீரவாஞ்சி நகர் 3 வது வடக்குத் தெருவில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 4 லட்சம் மதிப்பிலான புதிதாக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ரிப்பன் வெட்ட திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வடக்கு திட்டக்குளத்தில் ரூபாய் 3.50 லட்சம் மதிப்பிலான புதிதாக பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், நகரச் செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாதுரை பாண்டியன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், நகர மன்ற உறுப்பினர் கவியரசன், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி,மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி, வேல்ராஜ்,பழனிகுமார்,பழனி முருகன், ஜெய்சிங், ரேவதி, கோமதி,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.

Share this…

CATEGORIES
TAGS