BREAKING NEWS

திமுகவில் ஒரு கோடி புதிய உறுப்பினர் சேர்க்கும் பணி முகாம்.

திமுகவில் ஒரு கோடி புதிய உறுப்பினர் சேர்க்கும் பணி முகாம்.

தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க, ஒரு கோடி புதிய கழக உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கினையொட்டி மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி, செம்பனார்கோவில் மத்திய ஒன்றியம் மற்றும் தெற்கு ஒன்றியங்களில் புதிய உறுப்பினர் சேர்க்கும் முகாமை மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் மற்றும் பூம்புகார் சட்டமன்ற தொகுதி தலைமை கழக பொறுப்பாளர்- மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இளையராஜா கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தனர்.

 

 

முகாமில் மாற்றுக் கட்சியிலிருந்து ஏராளமானோர் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். முகாமில் ஒன்றிய செயலாளர்கள் அமுர்த.விஜயகுமார், எம்.அப்துல்மாலிக், பி.எம்.அன்பழகன், மாவட்டத் துணைச் செயலாளர் மு.ஞானவேலன், செம்பனார்கோயில் ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், துணைத் தலைவர் மைனர் பாஸ்கர், தலைமை பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சிவதாஸ், காலிகாந்தி, இந்து சமய அறநிலைத்துறை குழு தலைவர் சுவாமிநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எம்.சித்திக் மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS