BREAKING NEWS

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி.

 

மயிலாடுதுறை மாவட்டம்,

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் உளுத்துகுப்பை ஊராட்சியில் இலவச கண் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜகுமார் ஏற்பாட்டில் டி எல் சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

 

இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்து பேசினார்.

 

 

மயிலாடுதுறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து மருத்துவர்கள் ரகுராம், பிரவீன், பார்த்தசாரதி, வட்டார மருத்துவ அலுவலர் ஹரிகிருஷ்ணன் செவிலியர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு மருத்துவ பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கினர்.

 

 

மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு மருந்து மாத்திரை வாங்கிக் கொண்ட பொதுமக்கள் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

 

 

அதனைத் தொடர்ந்து உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் வாரசந்தையை பூம்புகார் எம்எல்ஏ திறந்து வைத்தார். வல்லாளகரம் ஊராட்சியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு பேனா உள்ளிட்ட உபகரணங்கள், பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.

 

நிகழ்ச்சிகளில் ஒன்றிய செயலாளர்கள் ஞான.இமயநாதன்,, எம்.அப்துல் மாலிக், மாவட்ட திமுக துணை செயலாளர் செல்வமணி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் சிவதாஸ், மயிலாடுதுறை ஒன்றிய குழு உறுப்பினர் மோகன், மற்றும் ஒன்றிய நகர பேரூர் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )