BREAKING NEWS

திமுக கொடுத்த 521 தேர்தல் வாக்குறுதியில் 20 வாக்குறுதிகள் கூட நிறைவேற்றப்பட வில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு.

திமுக கொடுத்த 521 தேர்தல் வாக்குறுதியில் 20 வாக்குறுதிகள் கூட நிறைவேற்றப்பட வில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு.

திமுக கொடுத்த 521 தேர்தல் வாக்குறுதியில் 20 வாக்குறுதிகள் கூட நிறைவேற்றப்பட வில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு. அப்படி நிறைவேற்றியதாக தமிழக முதல்வர் கூறினால் அவர் வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா ? என கேள்வி எழுப்பி உள்ளார்.

கரூரில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

கரூர் மக்களவை தொகுதியின் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர் வி.வி.செந்தில்நாதன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.

பின்னர், கோவை சாலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை.,

கரூர் அமைச்சர் செந்தில்பாலாஜி ஜெயில் உள்ளார். கரூர் காங்கிரஸ் கட்சி எம்.பி., வேட்பாளர் ஜோதிமணி வேடந்தாங்கல் பறவை போல தொகுதி பக்கம் வந்து சென்று வருகிறார்.

2019 தேர்தலில் பாஜக கொடுத்த தேர்தல் வாக்குறுதி 295-ம் முழுமையாக நிறைவேற்றி உள்ளது. ஆனால், திமுக கொடுத்து இருந்த 521 தேர்தல் வாக்குறுதியில் 20 வாக்குறுதிகள் கூட நிறைவேற்றப்பட வில்லை. அப்படி நிறைவேற்றியதாக முதல்வர் கூறினால் வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா ? என கேள்வி எழுப்பினார்.

கரூர் தொகுதி என்பது இனி மோடிக்கும், மக்களுக்கும் இடையே ஒரு பாலமாக இருக்கும்.

கண்டிப்பாக தமிழகத்திற்கு மீண்டும் மோடி வருகிறார். ஏப் 2-ம் தேதிக்கு பிறகு தேதி கூறப்படும். எங்கு வருகிறார் என்பது குறித்து பிறகு அறிவிக்கப்படும்.

கரூர் மாவட்டத்தில் கிராமப்புறத்தில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு அதில் பிரதமர் மோடி அல்லது உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவரில் ஒருவரை அழைத்து வர வேண்டும் என்பது மிகவும் ஆவலாக உள்ளது. அதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்றார்.

CATEGORIES
TAGS