திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக அறிஞர் அண்ணாவின் 55 ஆம் ஆண்டு நினைவு அமைதி பேரணி
கரூரில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அறிஞர் அண்ணாவின் 55 ஆம் ஆண்டு நினைவு அமைதி பேரணி மாவட்டவைத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் இருந்து கோவை ரோடு சாலை வழியாக கரூர் ரவுண்டானா கார்னரில் அண்ணாவின் திருவருவுச்சிலைக்கு அமைதி பேரணியாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மௌன அஞ்சலி செலுத்தினர்கள்.
இந்த நிகழ்வில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ. கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி. குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் இரா. மாணிக்கம். கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன். துணை மேயர் சரவணன். மாவட்ட. மாநில. நகர.கிளை. ஒன்றிய. நிர்வாகிகள் மற்றும் ஆயிரத்திற்கு மேற்பட்ட தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். செய்தியாளர் கோபால்.
TAGS Dmkkarurஅண்ணாஅரசியல்அறிஞர் அண்ணா 55 ஆம் ஆண்டு நினைவு தினம்கரூர்கரூர் மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்புகளூர்முக்கிய செய்திகள்