BREAKING NEWS

திருக்களாச்சேரியில் விவசாயிகளுக்கு இடுபொருள் வழங்கும் நிகழ்ச்சி.

திருக்களாச்சேரியில் விவசாயிகளுக்கு இடுபொருள் வழங்கும் நிகழ்ச்சி.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் திருக்களாச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் -2023 ஆம் ஆண்டு இடு பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இடுபொருள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

 

விழாவில், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சேகர், மயிலாடுதுறை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் நிர்வாக குழுத் தலைவர் மு.ஞானவேலன், தஞ்சை மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.அப்துல் மாலிக்,

செம்பை வடக்கு ஒன்றிய செயலாளர் அமுர்த.விஜயகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எம்.சித்திக், ஊராட்சி மன்ற தலைவர்கள் பைலட், ராஜா, ரெங்கராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் திமுக பொறுப்பாளர்கள் விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS