BREAKING NEWS

திருச்சி என்.ஐ.டி.யில் சர்வதேச மகளிர் தின 4வது நாள் கொண்டாட்டம்.

திருச்சி என்.ஐ.டி.யில் சர்வதேச மகளிர் தின 4வது நாள் கொண்டாட்டம்.

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள என்.ஐ.டி.யில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

 

இந்நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி நகர காவல் துணை ஆணையர் (தெற்கு) ஸ்ரீதேவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெண்கள் மற்றும் பாதுகாப்பு என்ற தலைப்பில் பேசினார்.  

 

 

அப்போது மகளிர் தினத்தின் தோற்றம் மற்றும் தற்போதைய காலத்தில் ‘பெண்கள் அதிகாரமளித்தல்’ என்ற சொல்லுக்கு அளிக்கப்படும் கவனம் குறித்தும், பெண்கள் தாங்களாகவே தங்களின் அதிகாரம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,

 

 

அதற்கு மற்ற பெண்களுக்கு உதவ வேண்டும் என்றும், சைபர்ஸ்பேஸ், பொதுப் போக்குவரத்து மற்றும் சாலையைப் பயன்படுத்தும் போது ஒருவருக்கு இருக்க வேண்டிய விழிப்புணர்வைப் பற்றி விவாதித்த அவர், ஒருவரின் சொந்த பாதுகாப்பை மைய புள்ளியாக வைத்திருப்பது மிகவும் இன்றியமையாதது என்று கூறினார்.

 

 

மேலும் தனிப்பட்ட இடங்கள் முதல் ஆன்லைன் நடவடிக்கைகள் வரை, பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் பொறுப்புள்ள குடிமக்களாக செயல்பட  வேண்டும். குற்றங்களைப் புகாரளிப்பதன் முக்கியத்துவம் மற்றும் அத்தகைய சட்ட நடைமுறைகளை எளிதாக்குவதற்கு மக்கள் பயன்படுத்தக்கூடிய வசதிகள் பற்றியும். 

 

 

காவல்துறை அதிகாரிகளுடன் முறையான தொடர்பு வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டால் உடனடியாக பதிலளிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பேசினார். 

 

முன்னதாக மகளிர் பிரிவின் தலைவி டாக்டர் எஸ். வேல்மதியின் அனைவரையும் வரவேற்றார். மகளிர் பிரிவு உறுப்பினர் பேராசிரியை எல். சசிகலா நன்றி கூறினார்.

 

CATEGORIES
TAGS