BREAKING NEWS

திருச்சி கீழமுல்லக்குடி ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

திருச்சி கீழமுல்லக்குடி ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள கீழமுல்லக்குடி ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

திருச்சி கால்நடை பராமரிப்பு துறை சார்பில் திருவெறும்பூர் ஒன்றியம் கீழமுல்லக்குடி ஊராட்சியில் உள்ள கால்நடை மருந்தகத்தில் கால்நடை மற்றும் சுகாதார விழிப்புணர்வு முகாமை கீழமுல்லக்குடி ஊராட்சி மன்ற தலைவர் கோகிலா சண்முகம் தொடங்கி வைத்தார்.

 

முகாமில் கால்நடைகளுக்கு பொது சிகிச்சை, குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல் ஆகிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் 614 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதுடன் விவசாயிகளுக்கு தாது உப்பு கலவை வழங்கப்பட்டது.

 

முகாமில் கன்று பேரணி நடத்தி சிறந்த கிடாரி கன்று தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் மற்றும் கால்நடை வளர்ப்பில் சிறந்த பராமரிப்பு மேலாண்மைக்கான விருது விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

 

திருச்சிராப்பள்ளி கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் மருதைராஜூ முகாமிற்கு தலைமை தாங்கினார். முகாம் ஏற்பாடுகளை கால்நடை உதவி மருத்துவர் திருமலைச்செல்வி செய்திருந்தார்.

கால்நடை உதவி மருத்துவர் கணேஷ்குமார் கால்நடை ஆய்வாளர்கள் டெய்சி ராணி, முருகன் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

 

CATEGORIES
TAGS