திருச்சி சர்வதேச விமானநிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேட்டி.

கள்ளச்சாராய இறப்பு மிகவும் மன வேதனை அளிக்கிறது – மதுவிலக்கை முழுமையாக நடைமுறை படுத்த வேண்டும் என்பது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேண்டுகோள்.
நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளுக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் தலைவராக இருக்கக்கூடியவர் குடியரசு தலைவர் – எனவே குடியரசு தலைவர் தான் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும்.
இந்த திறப்பு விழாவில் இந்தியாவில் உள்ள பெரும்பாலான கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்ள போவதில்லை – திமுக காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் இந்த விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று முடிவெடுத்து இருக்கிறோம்.
மே 28ஆம் தேதி அவர்கள் தேர்வு செய்திருக்கிறார்கள் மே 28 சாவர்க்கரின் பிறந்த நாள் – கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பது ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
ஹிஜாப் விவகாரத்தில் முஸ்லிம்கள் எதிர்ப்பை முழுவதுமாக பிஜேபி கர்நாடகாவில் நிலைநாட்டினார்கள் – இந்த தேர்தல் முடிவு ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் வருகின்ற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்தும்.
கள்ளச்சாராய இறப்பு மிகவும் மன வேதனை அளிக்கிறது – மதுவிலக்கை முழுமையாக நடைமுறை படுத்த வேண்டும் என்பது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேண்டுகோள்.