BREAKING NEWS

திருச்சி  திருச்சியையும் ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் பாலம் சீரமைக்க அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டார்.

திருச்சி  திருச்சியையும் ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் பாலம் சீரமைக்க அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டார்.

திருச்சி  திருச்சியையும் ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றில் 1976 ஆம் ஆண்டு காவிரி பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் 541.46 மீட்டர் நீளமும் 19.20 மீட்டர் அகலமும், 16 கண்கள் கொண்டது.

 

இதில் வைக்கப்பட்ட 192 அதிர்வு தாங்கிகளில் அவ்வப்போது பழுது ஏற்பட்டது. அதன் காரணமாக பாலம் வலுவிழக்கும் நிலை ஏற்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்ட நிலையில், பாலத்தை முழுமையாக சீரமைக்க முடியவில்லை. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு பாலத்தை முழுமையாக சீரமைக்க அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டார்.

 

இதையடுத்து பாலத்தில் சீரமைப்புப் பணிகளுக்காக மட்டும் ரூ.6.84 கோடி ஒதுக்கப்பட்டது. பேரிங்குகள் மாற்றுதல், இரு கண்களுக்கு இடையேயான இணைப்புகளை சீரமைத்தல், புதிய தார் சாலை அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள ஏதுவாக கடந்த செப்டம்பர் முதல் பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

 

வாகனங்கள் கும்பகோணத்தான் சாலை, ஓடத்துறை பாலம் வழியாக திருப்பி விடப்பட்டன. பிரதான பாலத்தில் போக்குவரத்து பயன்பாடு இல்லாத காரணத்தினால், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்ல வேண்டியவர்கள் மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

 

நெடும் பயணம் மேற்கொண்டவர்களும் நெடுஞ்சாலையில் வெகு நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் போக்குவரத்து காவலர்களும் முனைப்புடன் ஈடுபட்டனர்.

 

CATEGORIES
TAGS