திருச்சி துவாக்குடியில் கல்வி இடைநிற்றல் மாணவர்களை கண்டறியும் கணக்கெடுப்பு நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி பகுதியில் கல்வி இடைநிற்றல் மாணவர்களை கண்டறியும் கணக்கெடுப்பு நடைபெற்றது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மை கல்வி அலுவலரின் அறிவுரையின்படி பள்ளி செல்லாத குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் கணக்கெடுப்பு பணிகள் துவாக்குடி மழை வடக்கு பள்ளியின் அனைத்து குடியிருப்பு பகுதிகளும் நடைபெற்றது.
இதில் ஆறு வயது முதல் 18 வயது உடைய அனைத்து குழந்தைகளும் பள்ளியில் படிப்பதை உறுதி செய்யப்பட்டது அவ்வாறு பள்ளி படிப்பின் போது ஏற்பட்ட இடைநீற்றல் மற்றும் பள்ளியில் இதுவரை சேர்ந்திடாத மாணவர்கள் விபரம் கணக்கெடுக்கப்பட்டது.
இதில் திருவெறும்பூர் வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநர்கள் கார்த்திகேயன், மீரா, பரமேஸ்வரி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை கருணாம்பாள் மற்றும் சிறப்பு பயிற்றுநர்கள் ஆகியோர் இந்த கணக்கெடுப்பில் கலந்து கொண்டனர்.