BREAKING NEWS

திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது – 3 கிலோ கஞ்சா பறிமுதல்.

திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது – 3 கிலோ கஞ்சா பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன் உத்தரவின்படி திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் மேற்பார்வையில் திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன் தலைமையில் முதல் நிலை காவலர்கள் சுந்தர்ராஜ் மற்றும் முருகேஷ்பாபு ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் நேற்று (16.04.2023) ரோந்து பணியில் ஈடுபட்டபோது..,

 

 

திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் தேனி மாவட்டம் சோலைதேவன்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் மகன் அபிஷ் (எ) மருது (22) மற்றும் தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியைச் சேர்ந்த லிங்கம் மகன் தங்கமாரியப்பன் (22) என்பதும் அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

 

 

உடனே மேற்படி தனிப்படை போலீசார் எதிரிகளான அபிஷ் (எ) மருது மற்றும் தங்கமாரியப்பன் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 3 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS