திருச்செந்தூர் கோவில் அருகில் 100 அடி தூரம் கடல் உள்வாங்கியதால் பொதுமக்கள் அச்சம்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆறு படை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே சுமார் 100 அடி தூரம் கடல் உள்வாங்கியது. பக்தர்கள் அச்சமின்றி புனித நீராடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகில் அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் கடல் உள்வாங்குவதும், வெளியே வருவதுமாக நடைபெற்று வருவது வழக்கமாக திகழ்வது ஒன்றாகும்.
அந்த வகையில் 25.06.2025 அன்று அமாவாசை என்பதால் திருச்செந்தூர் கடல் இன்று காலையில் இருந்தே சுமார் 100அடி தூரம் உள்வாங்கி பாசி படிந்த பச்சை நிறத்தில் காணப்படுகிறது.
இதனால் அய்யா வைகுண்டர் அவதாரபதி அருகே கடற்கரையில் பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிகிறது.
ஆனாலும் பக்தர்கள் வழக்கமாக நீராடும் பகுதியில் பக்தர்கள் எந்தவித அச்சமின்றி பதற்றமின்றி புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்
மேலும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் பாறைகள் மீது ஏறி நின்று புகைப்படங்கள் செல்ஃபி கள் எடுத்து மகிழ்ந்தனர்.