திருநெல்வேலி திரு இருதய சிபிஎஸ்சி பள்ளியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டி.

நெல்லை மாவட்டம் பணகுடி திருஇருதய சிபிஎஸ்சி பள்ளியில் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிஹரன் பிரசாத் கலந்து கொண்டு மாணவ மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று தேசிய கொடி மற்றும் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்து.
காவல் கண்காணிப்பாளர் ஹரிஹரன்,மற்றும் வள்ளியூர் துணை கண்காணிப்பாளர் யோகேஷ் குமார்விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தனர். பின்னர் மாணவ மாணவிகளுக்கு தங்களுடைய கல்வி ஒழுக்கம் எதிர்கால வாழ்க்கைக்குரிய நெறிமுறைகளை எடுத்துரைத்தார். பின்னர் பெற்றோர்களிடம் தங்களுடைய குழந்தைகளின் நலன்களை பற்றி கேட்டறிந்தார்.
குழந்தைகள் செல்போனை பயன்படுத்த விட வேண்டாம்,பெற்றோர்கள் குழந்தைகளிடம் நண்பனாக இருக்கவேண்டும்,வாரம் ஒரு நாள் பெற்றோர்கள் குழந்தைகளுக்காக நேரத்தை செலவிடுங்கள் என்று கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.