திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன் IPS அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த முகநூல் நண்பர்கள் குழுவினர் .

திருநெல்வேலி மாவட்டம் அடைமிதிப்பான் குளம் கல்குவாரி விபத்தில் சிக்கியவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ப.சரவணன் IPS அவர்கள் 8 நாட்களாக சம்பவ இடத்திலேயே முகாமிட்டு மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினார்கள். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக திருநெல்வேலி முகநூல் நண்பர்கள் குழுவினர் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ப. சரவணன் IPS அவர்களை இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் முகநூல் நண்பர்கள் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் நெல்லை M டேவிட், மூத்த பத்திரிகையாளர் மேலப்பாளையம் TSMO ஹஸன் மற்றும் முகநூல் நண்பர்கள் குழு உறுப்பினர்கள் நெல்லை டவுன் C தங்கதுரை, கல்லூர் E வெங்கடேசன், குறிச்சி KGK கணேஷ மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
CATEGORIES திருநெல்வேலி
