திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் குறை தீர்ப்பு கூட்டம்.

திருநெல்வேலி காவல் சரக துணை தலைவர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் நடத்தப்பட்ட பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம்.
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு கொடுக்க வந்த பொதுமக்களை திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ் குமார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன், நேரில் சந்தித்து 34 மனுக்களை பெற்று மனு மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்கள்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனு மீதான விசாரணையை விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் முந்தைய வாரங்களில் நடந்த குறைதீர்ப்பு கூட்டத்தில் நிலுவையில் இருந்த 30 மனுக்களின் மனுதாரர்கள் மீண்டும் வரவழைக்கப்பட்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ராஜூ மற்றும் மாரிராஜன் தலைமையில் மனு விசாரிக்கப்பட்டு 9 மனுக்கள் முடிக்கப்பட்டுள்ளது.