திருப்பனந்தாளில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகள் தேசிய பெடரேஷன் வாள் சண்டை போட்டியில் பங்கு பெற பா.ம.க.சார்பில் நிதி உதவி.
![திருப்பனந்தாளில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகள் தேசிய பெடரேஷன் வாள் சண்டை போட்டியில் பங்கு பெற பா.ம.க.சார்பில் நிதி உதவி. திருப்பனந்தாளில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகள் தேசிய பெடரேஷன் வாள் சண்டை போட்டியில் பங்கு பெற பா.ம.க.சார்பில் நிதி உதவி.](https://aramseithigal.com/wp-content/uploads/2022/12/WhatsApp-Image-2022-12-26-at-9.46.18-PM.jpeg)
தஞ்சாவூர், திருப்பனந்தாளில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஜீவிதா, சுபஹீ ஆகிய மாணவிகள் தேசிய பெடரேஷன் வாள் சண்டை போட்டியில் பங்கு பெற வருகிற 30ந் தேதி ஜம்மு காஷ்மீர் செல்ல உள்ளார்கள் அவர்கள் செல்வதற்கு பணம் ஒரு தடை என்பதை அறிந்த தஞ்சை வடக்கு மாவட்ட பாமக சார்பில் தலா ரூபாய் பத்தாயிரம் வழங்கி வாள் சண்டையில் வெற்றிபெற வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.
அப்போது மாநில உழவர் பேரியக்க தலைவர் கோ.ஆலயமணி மாவட்ட பாமக தலைவர் அமிர்த கண்ணன், மாவட்ட செயலாளர் தி. ஜோதிராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் திருஞானம்பிள்ளை திருப்பனந்தாள் பேரூர் செயலாளர் அய்யப்பன் முன்னாள் ஒன்றிய செயலாளர் பிரகாஷ் பயிற்சியாளர் செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES தஞ்சாவூர்
TAGS அரசியல்அரசு உதவி பெறும் பள்ளிசுபஹீஜீவிதாதஞ்சாவூர் மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருப்பனந்தாள்தேசிய பெடரேஷன் வாள் சண்டை போட்டிமுக்கிய செய்திகள்விளையாட்டு செய்திகள்