திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த தளி பேரூராட்சியில் தி.மு.க அரசை கண்டித்து, மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம்.

சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றால் மக்களை வாட்டி வதைக்கும் விடியா திமுக அரசை கண்டித்து, உடுமலைப்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான மாண்புமிகு K.ராதாகிருஷ்ணன் அவர்கள், தலைமையில் மத்திய பேருந்துநிலையம் முன்பு, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய உடுமலைப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் K.ராதாகிருஷ்ணன். தற்போது உடுமலைப்பேட்டையில் நடந்து வரும்பணிகள் அனைத்தும் அதிமுக அரசின் போது கொண்டு வந்த திட்டங்கள் ஆகும் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையம் தங்கம்மாள் ஓடை சாக்கடை பணி பல்வேறு பகுதிகளில் தார் சாலை அமைத்தல் தினசரி சந்தை விரிவாக்க பணி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அதிமுக அரசின் போது கொண்டு வந்த நலத்திட்டங்கள் தான் எனவும் தற்போது இருக்கும் திமுக ஆட்சி அந்த வேலைகளை தாமதமாக செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைத்து தொழிலாளர் நல சங்கத்தினர் ஆட்டோ ஓட்டுநர்கள் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.