திருவண்ணாமலையில் மாற்று திறனாளிகள் சிறப்பு பயிற்சி முகாம்.

திருவண்ணாமலை உள்ள தனியார் மண்டபத்தில் அனைத்து வகை மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் சிவாஜி தலைமை தாங்கினார். அகில இந்திய செயல் தலைவர் நம்புராஜன் மற்றும் மாநில தலைவர் வில்சன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு மூலம் கிடைக்கும் நல திட்டங்கள் திட்டங்களின் சட்ட பிரிவுகள். மாற்றுத் திறனாளிகளுக்கான சட்டப்பிரிவுகள், சட்ட பாதுகாப்புகள், உரிமைகள் ஆகியவை பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் ரமேஷ்பாபு ,திருவண்ணாமலை மாவட்டக்குழு உறுப்பினர்கள், திருவண்ணாமலை ஒன்றியம், செங்கம், புதுப்பாளையம், ஒன்றியம், தண்டராம்பட்டு ஒன்றியம், கீழ்பென்னாத்தூர் ஒன்றியம்,
உறுப்பினர்கள் நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட ஊர்களில் இருந்து 200- க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனர். இறுதியில் மாவட்ட பொருளாளர் சத்யா நன்றி கூறினார்.