BREAKING NEWS

திருவள்ளூரில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.

திருவள்ளூரில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.

திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் KENC அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 1,847 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.89.03,லட்சம் மதிப்பீட்டில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னதாக பேசிய அவர் விலையில்லா சைக்கிள்களை பெறும் மாணவ-மாணவிகள் முதல்-அமைச்சரின் எண்ணம் ஈடேறும் வகையில் நன்கு படித்து நல்லதொரு வேலைவாய்ப்பையும் பெற்று உங்கள் குடும்பத்தையும், நீங்கள் பிறந்த கிராமத்தையும் நல்ல நிலைக்கு உயர்த்த பாடுபட வேண்டும் என்றார்.

 

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.ஜி ராஜேந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோ.சரஸ்வதி, திருவள்ளூர் நகர மன்ற தலைவர் உதயமலர்பாண்டியன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS