திருவள்ளூரில் கல்வித்துறை மற்றும் ஷெல்டர் ட்ரஸ்ட் இணைந்து குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் சமூக பாதுகாப்புத்துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மாவட்ட சட்டப்பணி ஆணை குழு மாவட்ட பள்ளி கல்வித்துறை மற்றும் ஷெல்டர் ட்ரஸ்ட் இணைந்து குழந்தைகள் தின விழா மற்றும் குழந்தைகள் உரிமை தின நிகழ்ச்சியினை சிறப்பாக நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பயிற்சி ஆட்சியர் கேத்தரின் சரண்யா உரிமையியல் நீதிபதி செயலர் பி வி சாண்டில்யான் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தினி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் தேன்மொழி குழந்தைகள் நல குழு தலைவர் மேரிஅக்ஸீசியா ஷெல்டர் டிரஸ்ட் நிறுவனர் சாலமன் ராஜா மற்றும் சமூகப் பணியாளர் ஜெயபால் கலந்து மற்றும் இரவு பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சியில் குழந்தைகளின் நடனத்தை பார்த்து ரசித்து இறுதியில் 120 குழந்தைகளுக்கு ஷெல்டர் டிரஸ்ட் மூலம் இலவசமாக வழங்கப்பட்ட ஸ்கூல் பேக்கை மாவட்ட பயிற்சி ஆட்சியர் கேத்தரின் சரண்யா அவர்கள் குழந்தைகளுக்கு வழங்கி குழந்தைகள் தினத்தினை சிறப்பாக கொண்டாடினர்.