திருவள்ளூர். நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெகதீஷ் சுந்தர் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

திருவள்ளூர். நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெகதீஷ் சுந்தர் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில்
திருவள்ளூர்(தனி)
தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீஷ் சுந்தர் இன்று தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பிரபு சங்கர் அவர்களிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.
பின்பு பத்திரிகையாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர்
திருவள்ளூர் மாவட்டத்தில் தற்பொழுது மணல் மண் கொள்ளையடிக்கப்படுகிறது எந்தக் அரசியல் கட்சித் தலைவர்களும் ஆட்சிக்கு
வந்தாலும் இதை தான் செய்து வருகின்றனர் என்று குற்றம் சாட்டினார்,
மேலும் ஏரிகளுக்கு வரக்கூடிய கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதால் ஏரிக்கு வரவேண்டிய தண்ணீர் வருவதில்லை எதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன் விவசாயம் அதிக அளவு பாதிக்கப்பட்டு வருவதாகவும்
தற்போது அரசு துறைகளில் தமிழர்களுக்கு வேலையில்லாமல் மிகவும் திண்டாடி வருகின்றனர்
தமிழகத்தில் மிகச்சிறந்த கல்வி நிறுவனங்கள் இருந்தும் பட்டப் படிப்பு படித்த தமிழ் இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில்லை
இதற்குக் காரணம் அதிக பணித்துறைகளில் வடமாநிலம் சார்ந்தவர்கள் தான் பணி அமர்த்த படுவதாகவும் இதனால்
தமிழ் மக்கள் மிகவும் துன்பப்பட்டு வருகின்றார்கள்
என்றும்
தற்போது இருக்கும் ஆட்சியாளர்கள் மதுக்கடைகளையும் மணல் மண் இவைகளின் வருமானத்தையே நம்பி இருப்பதினால் தனியார் நிறுவனங்கள் குறைந்துவிட்டதாவும் இதனால் வேலை வாய்ப்பு திண்டாட்டம் ஏற்பட்டுள்ளதாக
தெரிவித்தார் மேலும் அதனைத்தொடர்ந்து பேசியபோது
நாம் தமிழர் கட்சியின் சார்பாக நான் வெற்றி பெற்றால் நான் ஒரு பட்டதாரி என்பதினால் அனைத்து இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்க முயற்சி மேற்கொள்வேன் என்று
தெரிவித்தார்.