BREAKING NEWS

துலுக்கர்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற்றது.

துலுக்கர்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 2023 -24 கல்வியாண்டுக்கான பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் தலைவி அப்ரோஸ் முகைதீன் பாத்திமா தலைமையில் நடைபெற்றது. புதிதாக தலைமை ஆசிரியர் பதவியேற்றிருக்கும் செர்பின்அருள் வரவேற்புரையாற்றினார்.

 

கூட்டத்தில் பள்ளியில் புதிதாக தலைமை ஆசிரியாராக பதவியேற்றிருக்கும் செர்பின் அருளுக்கு பள்ளி மேலாண்மைக் குழு சார்பாக பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்துகொண்ட பள்ளி மேலாண்மைக் குழுவைச் சார்ந்த அனைவருக்கும் புதிய தலைமையாசிரியர் சால்வை அணிவித்து வரவேற்றார். மேலும் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முதலாவதாக பள்ளியில் படிப்பை தொடராமல் இருக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை சந்தித்து மாணவர்களின் படிப்பை தொடருதல், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்வதற்கு வாய்ப்பாக பேருந்து வசதி வேண்டி கோரிக்கை வைத்தல், மாணவர்களுக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டுதல், ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் தலைமையாசிரியர் பொறுப்பேற்ற ஒரு மாதத்தில் பள்ளிக்கு புதிய உடற்கல்வி ஆசிரியரை பெற்றுத்தந்ததற்காக எஸ்எம்சி சார்பாக பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பை ஆசிரியர் செல்வ கண்ணன் செய்திருந்தார்.

இதில் பள்ளி மேலாண்மைக்குழு துணை தலைவர் கோகிலா, உறுப்பினர்கள் நிருபர் ராஜன், மிக்கேல் அமலா, ரேவதி, இசக்கியம்மாள், பேபி கிளாடியஸ் சமூக ஆர்வலர் ஜெயராஜ், வார்டு உறுப்பினர் அப்துல் கபூர், மகளிர் குழு ஹப்சா பேகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS