BREAKING NEWS

துலுக்கர்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 77 ஆவது சுதந்திரதினவிழா..!!

துலுக்கர்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 77 ஆவது சுதந்திரதினவிழா..!!

திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 77 ஆவது சுதந்திரதினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தலைமை ஆசிரியர் ஷெர்பின் அருள் வரவேற்புரை வழங்கினார். ஆனைகுளம் பஞ்சாயத்து தலைவர்  அசன்மைதீன் அவர்கள் தேசியக் கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.

 

மேலும் இவ்விழாவில் தொடக்கப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கான் பள்ளி மேலாண்மை குழு தலைவி திருமதி அப்ரூஸ் முகைதீன் பாத்திமா, மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் திருமதி ஹப்சா பேகம், சமூக ஆர்வலர் ஜெயராஜ் வார்டு உறுப்பினர் வார்டு உறுப்பினர் அப்துல் கபூர் மற்றும் முன்னாள் மாணவர் வைஸ் மற்றும்  ராஜா மணி முகமது இலியாஸ் போன்றோர் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது மேலும் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது விழாவின் இறுதியாக திருமதி முருகேஸ்வரி தமிழ் ஆசிரியை நன்றி கூறினார் இந்நிகழ்ச்சியை ஆசிரியர் திருச்செல்வன் அவர்கள் தொகுத்து வழங்கினார் விழா இனிதாக நடைபெற்றது.

Share this…

CATEGORIES
TAGS