BREAKING NEWS

தூத்துக்குடியில் காரில் கஞ்சா வைத்திருந்த மூன்று பேரை கைது செய்த போலீசார்.

தூத்துக்குடியில் காரில் கஞ்சா வைத்திருந்த மூன்று பேரை கைது செய்த போலீசார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே காரில் கஞ்சா வைத்திருந்த மூன்று பேரை கைது செய்த போலீசார் காரையும் பறிமுதல் செய்துள்ளனர். தெற்காத்தூர் நரசன்விளை வேகத்தடை அருகே ஆத்தூர் காவல் உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

 

 

 

அப்போது அந்த வழியாக வந்த கருப்பு நிற மகேந்திரா குவாண்டோ காரை மறித்து போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். இதில் காரின் டாஸ் போர்டில் மறைத்து வைத்திருந்த 150 கிராம் கஞ்சாவை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து காரையும், கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

 

 

மேலும் காரில் இருந்த டிரைவரான சேர்ந்தபூமங்கலம் மறவர் தெரு, முத்துராஜ் மகனான செல்வம் என்ற முத்து செல்வகுமார் (வயது 31), புதுக்கோட்டை பிரகாஷ் நகர் ராமர் மகனான அழகு முத்து (வயது 21), பழையகாயல் தேவர் தெரு மாரியப்பன் மகனான சரவணன் (வயது 27) ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

 

 

கைது செய்யப்பட்ட செல்வம் மீது சோழரவரம் காவல் நிலையத்திலும், அழகு முத்து மீது புதுக்கோட்டை காவல் நிலையத்திலும், சரவணன் மீது ஆத்தூர் காவல் நிலையத்திலும் ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளது.

CATEGORIES
TAGS