BREAKING NEWS

தூத்துக்குடியில் திட்டமிட்டு தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் சமூக விரோத கும்பலை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்.

தூத்துக்குடியில் திட்டமிட்டு தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் சமூக விரோத கும்பலை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்.

தூத்துக்குடி மாவட்டம் பழையகாயலில் ஒரு பிரிவு மக்கள் மீது திட்டமிட்டு தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் சமூக விரோத கும்பலை கண்டித்தும், இந்த கும்பல் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து குண்டர்சட்டத்தில் சிறைபடுத்த கோரியும்,

 

தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று பழையகாயல் பஜாரில் மாவட்டச்செயலாளர் முரசுதமிழப்பன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

 

இதில் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ராஜ்குமார். ஸ்ரீவை. ஒன்றிய துணை செயலாளர் கனிபாண்டியன், செய்தி தொடர்பு மையம் மாவட்ட அமைப்பாளர் வேம்படிமுத்து, நில உரிமை மீட்பு இயக்க மாவட்ட அமைப்பாளர் வனவளவன், நாடாளுமன்ற தொகுதி துணை செயலாளர் மணிகண்டராசா,

 

மகளிர் விடுதலை இயக்க மாவட்ட துணை செயலாளர் தமிழ்ச்செல்வி, தென்திருப்பேரை நகர செயலாளர் ஐய்யப்பன் , திருச்செந்தூர் ஒன்றிய துணைச் செயலாளர் கதிரவன் உட்பட பலர் கலந்து கொண்டணர்.

Share this…

CATEGORIES
TAGS